கோத்தபாய ராஜபக்சவை பெட்டிச்சமர் போல துரத்தியடிக்கும் ஸ்காட்லாந்து தமிழர்கள்

breaking

 2021 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP26) போது ஸ்காட்லாந்திற்கு   வருகை தந்த  இனப்படுகொலையாளி   கோத்தபய ராஜபக்ச  நிகழ்த்திய தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி ஸ்காட்லாந்து தமிழர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.


ஸ்காட்லாந்தின்   The Herald  மற்றும்  The National   ஆகிய பத்திரிகைகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது  போன்ற  தோற்றத்துடன் சிங்கள  பேரினவாத அரசு  தமிழர்கள் மீது நடத்திய  அட்டூழியங்களை வெளிப்படுத்தும்   செய்திகள்  மற்றும் படங்களை எடுத்துக்காட்டும் வகையில்  பரப்புரைகள் ஸ்கொட்லாந்து தமிழர்களினால் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது  

  


 தமிழினப்படுகொலை நிகழ்த்திய கோட்டபாய ராஜபக்ச ஒரு  தேடப்படும் குற்றவாளி என்கின்ற  அறிவிப்போடு     சர்வதேச  சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் Edinburgh நகரத்தில் டிஜிட்டல்  வான்  ஒன்று   நகரத்தை சுற்றி  வரக்கூடிய வகையிலும்   தொடர்ந்து பரப்புரைக