2021 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP26) போது ஸ்காட்லாந்திற்கு வருகை தந்த இனப்படுகொலையாளி கோத்தபய ராஜபக்ச நிகழ்த்திய தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி ஸ்காட்லாந்து தமிழர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
ஸ்காட்லாந்தின் The Herald மற்றும் The National ஆகிய பத்திரிகைகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்துடன் சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்திய அட்டூழியங்களை வெளிப்படுத்தும் செய்திகள் மற்றும் படங்களை எடுத்துக்காட்டும் வகையில் பரப்புரைகள் ஸ்கொட்லாந்து தமிழர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
தமிழினப்படுகொலை நிகழ்த்திய கோட்டபாய ராஜபக்ச ஒரு தேடப்படும் குற்றவாளி என்கின்ற அறிவிப்போடு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் Edinburgh நகரத்தில் டிஜிட்டல் வான் ஒன்று நகரத்தை சுற்றி வரக்கூடிய வகையிலும் தொடர்ந்து பரப்புரைக