உணவுப்பொதி, தேநீர் விலை குறைப்பு!

breaking

உணவுப்பொதி மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவுப்பொதியொன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவின் விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.